ஆழ்கடல் உயிரினங்களுக்கான தேசிய களஞ்சியம்
- பின்னணி: புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் இயங்கும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடல்வாழ் உயிரின வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE), கடல்சார் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), CMLRE-ன் “பவசாகரா” (Bhavasagara) பரிந்துரை மையத்தை, ஆழ்கடல் உயிரினங்களுக்கான தேசிய களஞ்சியமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002-ன் விதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவமான அங்கீகாரம், இந்தியாவின் பரந்த ஆழ்கடல் உயிரியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் மற்றும் ஆவணப்படுத்துவதற்கும் இந்த மையத்தை ஒரு முக்கியமான தேசிய வசதியாக நிறுவுகிறது.
- “பவசாகரா” பரிந்துரை மையம் தற்போது ஒரு முக்கிய அறிவியல் மையமாகச் செயல்படுகிறது. இங்கு வகைப்பாட்டியல் படி அடையாளம் காணப்பட்ட மற்றும் புவிசார் குறியீடு இடப்பட்ட 3,500-க்கும் மேற்பட்ட மாதிரி உயிரினங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
- இந்தச் சேகரிப்பில் கடற்பஞ்சுகள் (Cnidarians), வளைதசைப் புழுக்கள் (Annelids), மெல்லுடலிகள் (Molluscs), கணுக்காலிகள் (Arthropods) மற்றும் முட்தோலிகள் (Echinoderms) போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் முதல், சுறா வகை மீன்கள் (Elasmobranchs) மற்றும் எலும்பு மீன்கள் (Teleostean fishes) போன்ற முதுகெலும்புள்ள உயிரினங்கள் வரை பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன.
CMLRE பற்றி
- கடல்வாழ் உயிரின வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE) என்பது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
- இது இந்தியாவின் தனிச்சயமான பொருளாதார மண்டலம் (EEZ) மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடல்வாழ் உயிரின வளங்களை ஆய்வு செய்தல், நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாகும்.
நடப்பு தகவல்கள்
- சுவிதா இணையதளம்
- சுவிதா இணையதளம் என்பது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து அனுமதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான வசதிகளுக்கான கோரிக்கைகளை முறைப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத் தீர்வாகும்.
OPU-IVF-ET தொழில்நுட்பம்- பின்னணி: உத்திரப்பிரதேசம் பரேலியில் உள்ள ICAR-இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI), மேம்பட்ட OPU-IVF-ET தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முறையாக ஐந்து ஆரோக்கியமான சாஹிவால் (Sahiwal) கன்றுகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
ICAR பற்றி
- இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR), 1929-ல் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
- நாடெங்கிலும் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை இது மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறது.
OPU-IVF-ET தொழில்நுட்பம் பற்றி
- இது மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்படும் துணை இனப்பெருக்க முறையாகும்: அண்டம் எடுத்தல் (OPU), செயற்கை கருத்தரித்தல் (IVF), மற்றும் கரு மாற்றுதல் (ET).
- OPU: தீவிரமான ஹார்மோன் சிகிச்சை இல்லாமல், மீயொலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்தரப் பசுக்களிடமிருந்து அண்டங்கள் (அண்ட செல்கள்) எடுக்கப்படுகின்றன. இது கர்ப்பிணி அல்லது இளம் விலங்குகளிடமிருந்தும் கூட மீண்டும் மீண்டும் சேகரிக்க அனுமதிக்கிறது.
- IVF: சேகரிக்கப்பட்ட அண்ட செல்கள், மரபணு மேம்பாட்டை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர விந்தணுவைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் கருத்தரிக்கப்படுகின்றன.
- ET: இதன் விளைவாக உருவாகும் கருக்கள், பெறும் பசுக்களின் கருப்பையில் பொருத்தப்படுகின்றன. இது மேம்பட்ட இனங்களின் பெருக்கத்தை வேகப்படுத்துகிறது..
சாஹிவால் மாடுகள் (Sahiwal Cattle) பற்றி
-
- சாஹிவால் இந்தியாவின் மிகச்சிறந்த நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றாகும். வெப்பத்தைத் தாங்கும் திறன், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வெப்பமண்டலச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் பண்பு ஆகியவற்றால் இவை மதிப்பிடப்படுகின்றன.
- இவை மாண்ட்கோமரி பகுதியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) தோன்றியவை. தற்போது முக்கியமாக பஞ்சாப் (பெரோஸ்பூர், அமிர்தசரஸ்), ஹரியானா மற்றும் ராஜஸ்தான் (ஸ்ரீ கங்காநகர்) பகுதிகளில் காணப்படுகின்றன.
- இந்த இனம் லோலா (Lola), லம்பி பார் (Lambi Bar), முல்தானி (Multani) மற்றும் டெலி (Teli) போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
- சாஹிவால் மாடுகள் அதிக பால் கொடுக்கும் திறன் கொண்டவை; ஒரு கறவைக் காலத்தில் சுமார் 2,000–3,000 லிட்டர் பால் வழங்குகின்றன. இவற்றின் பாலில் அதிக வெண்ணெய் சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் A2 பீட்டா-கேசின் (A2 beta-casein) புரதம் உள்ளது.
பலிராஜ்கரில் இந்திய தொல்லியல் துறை (ASI) அகழ்வாராய்ச்சி
- பின்னணி: பண்டைய மிதிலையின் வரலாற்றை வெளிக்கொணரும் நோக்கில், பீகார் மாநிலம் பலிராஜ்கரில் (Balirajgarh) இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
- பலிராஜ்கர் பீகாரின் மதுபானி (Madhubani) மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இந்த இடம் பலி சக்ரவர்த்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேலும், இது விதேக நாட்டின் (Videha Kingdom) நிர்வாக மையமாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- மௌரியர், சுங்கர், குஷாணர், குப்தர் மற்றும் பாலர்கள் காலத்திலும் இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
- முந்தைய ஆய்வுகள் இங்கு கோட்டை அமைப்புகள் இருந்ததை அடையாளம் கண்டுள்ளன. இது ஒரு பெரிய அளவிலான, நன்கு வளர்ந்த நகரத் திட்டமிடலை உணர்த்துகிறது.
- இங்கு கண்டெடுக்கப்பட்ட மணிகள், செப்புப் பொருட்கள், சுடுமண் சிலைகள் (Terracotta figures) மற்றும் முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் (Punch-marked coins) ஆகியவை ஒரு செழிப்பான மற்றும் முன்னேறிய நாகரிகத்தைப் பிரதிபலிக்கின்றன.
விதேக நாடு (Videha Kingdom) பற்றி
- விதேக நாடு என்பது மிதிலை பிராந்தியத்தில் அமைந்திருந்த ஒரு பண்டைய அரசாகும். இது இன்றைய பீகார் மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
- இது ஜனக மன்னருடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும், இது வேத அறிவு மற்றும் தத்துவ சிந்தனைகளுக்கான மிக முக்கியமான மையமாகத் திகழ்ந்தது.

