தினசரி தேசிய நிகழ்வுகள்

NPS மறுபரிசீலனை  குழு

  • அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசு தேசிய ஓய்வூதிய முறையை (NPS ) குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது
  •  நான்கு பேர் கொண்ட குழுவை  நிதிச்செயலர் டி.வி. சோமநாதன் தலைமை தாங்குவார் மற்றும் ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட NPS ஐ மேற்பார்வையிடும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவரம் இக்குழுவில் உறுப்பினராக இருப்பார் .

தேசிய ஓய்வூதிய முறை பற்றி

  • மத்திய அரசு தேசிய ஓய்வூதிய முறையை (NPS) ஜனவரி 2004 முதல் (ஆயுதப் படைகளைத் தவிர) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • NPS ஆனது நாட்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) செயல்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது.
Next தினசரி தேசிய நிகழ்வு >