கணினித் தமிழ் விருது
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும்
- கணினி வழியில் தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
நோக்கம்
- தகவல் தொழில்நுட்பம் நாள்தோறும் பெருகிவருகிறது. இதனால் கணினிப் பயன்பாடும் பெருகிக்கொண்டே இருக்கிறது. தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். எனவே கணினி வழியாகத் தமிழ்மொழியைப் பரப்பும்வகையில் தமிழில் மென்பொருள்கள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் விருதுகள்
ஆளில்லா தானியங்கி நுண்ணறிவு வாகனம் அறிமுகம்
- ஆழ்கடல் ஆய்வுக்கான ஆளில்லா தானியங்கி நுண்ணறிவு வாகனம் மற்றும் ஆழ்கடல் ஆய்வு சாதனம் ஆகியவற்றை பள்ளிக்கரணையிலுள்ள தேசிய கடல் வள தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தின் 32-ஆவது நிறுவன தினத்தையொட்டி, இந்த புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- ஆந்திர மாநிலம், பமாஜி கிராமத்தில் உள்ள கடல் முனை வசதியில் அதிநவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடல் முனையில் வாகனங்கள் எளிதாக கடக்கக்கூடிய’டிரெசல்’ என்ற புதுமையான பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
- விஞ்ஞானி வேதாசலம் தலைமையிலான குழு ‘மட்சயா 6000 என்ற ஆழ்கடல் சாதனத்தை வடிவமைத்துள்ளது. இந்த சாதனம் 6,000 மீட்டர் வரை ஆழ்கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும்.
- இதேபோல, விஞ்ஞானி பாலநாக ஜோதி தலைமையிலான குழு வினர் இன்டெலிஜென்ஸி மானஸ் 1.1′ காரை உருவாக்கியுள்ளனர். இது ஆளில்லாத தானியங்கி வாகனம். இது மனிதர்கள் செல்ல முடியாத மிக ஆழமான கடல் பகுதியில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை சேகரிக்கும்.
- சங்கமாக தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) நவம்பர் 1993 இல் நிறுவப்பட்டது.
- NIOT ஒரு நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இயக்குனர் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
- புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் NIOT ஐத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவைக் கொண்ட இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) உயிரற்ற மற்றும் உயிரற்ற வளங்களை அறுவடை செய்வதில் தொடர்புடைய பல்வேறு பொறியியல் சிக்கல்களைத் தீர்க்க நம்பகமான உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதாகும்
மீன் புதை படிமம் கண்டெடுப்பு
- தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம், சிப்பி புதை படிமங்கள், ஸ்படிகம் நிலையை அடைந்த இயற்கை பிசின்கள் ஆகியவற்றை வரலாற்று ஆர்வலர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.
- தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் வட்டத்தில் தொல்லியல் களமான பட்டினமருதூர் கிராமம் மயான பகுதியில் மண் பாண்ட சிதைவுகள்,பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டட சிதைவுகள், கடல்சார் புதை படிமங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது
ஆய்வில் கிடைத்த கடல்சார் புதை படிமங்களில் சில முத்துசிப்பிகளின் படிமங்கள்
- மீன் புதை படிமம்
- சிப்பிகளின் புதை படிமங்கள்
- 100-110 மி.மீ. நீளம் கொண்ட கையடக்க பண் டைய மணல் கல் கருவி
- ஸ்படிகம் நிலையில் இயற்கை பிசின்களாகும்.
- ஆரம்ப கால வட்டெழுத்து கல்வெட்டு
- இவற்றை மதிப்பிடுகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவை மண்ணில் புதையுண்டிருந்தன தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

