முதல்வரின் காக்கும் கரங்கள்
முதலமைச்சர் ஆகஸ்ட் 19, 2025 அன்று முன்னாள் படை வீரர்கள் தொழில் முனைவோராக மாற உதவ ‘முதலவரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
முதலமைச்சர் 155 முன்னாள் படை வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார், அவர்களுக்கு மொத்தமாக 324.43 கோடி, தொழில்களுக்கான 30% மூலதன மானியம் உட்பட கிடைக்கும்.
திட்டத்தின் முதல் கட்டத்தில், மொத்தம் 348 பயனாளிகள் 30% மூலதன மானியம் மற்றும் 3% வட்டி மானியம் உட்பட 350.50 கோடி உதவித் தொகையைப் பெறுவார்கள், இது தொழில் முனைவோராக மாறும் முன்னாள் படை வீரர்களின் நிதிப் பாரத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
திட்டத்தின் நோக்கங்கள்
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு சுய தொழில் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல்.
மானியத்துடன் கூடிய கடன்கள் மூலம் நிதி உதவி வழங்குதல்.
திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான பயிற்சி அளித்தல்.

