அறிவியல்

சுகாதார அறிவியல் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகள்

அரியவகை மூளை நோய்த்தொற்று 

  • கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில், அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் அரியவகை மூளைத் தொற்றால் பாதிக்கப்பட்டு 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
  • ஆலப்புழை மாவட்டத்தின் பாணாவள்ளி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அசுத்தமான நீரில் உயிர் வாழும் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் ”பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்சிஃபலைடிஸ்” என்னும் அரியவகை மூளைத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
  • இது ”மூளையை உண்ணும் அமீபா” என்று அறியப்படுகிறது.
  • தொற்று பாதித்த அனைவரும் உயிரிழந்தவிட்டனர். காய்ச்சல், தலைவலி, வாந்தி, பார்வை மங்குதல், வலிப்பு ஆகியவை இந்த தொற்று பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
  • அசுத்தமான நீரில் உயிர் வாழும் இந்த அமீபா நுண்ணுயிரி மூக்கு வழியாக மனித உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • எனவே, நோயின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அசுத்தமான நீரில் குளிப்பதை மக்கள் தவிர்க்குமாறு ஆலப்புழை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Next அறிவியல் >

People also Read