அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
டீசலில் ஐசோபியூட்டனால் கலப்பை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது
- சூழல்: 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள், டீசலுடன் ஐசோபியூட்டனாலைக் கலப்பது கட்டாயம் என்ற விதிமுறையை இந்திய அரசு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
- இந்த முன்னெடுப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் (MoRTH) பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நோக்கம்
- இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
- இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
- போக்குவரத்துத் துறையின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்குத் துணை நிற்றல்.
Isobutanol பற்றி
- Isobutanol என்பது தாவர மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய ஒரு வகை ஆல்கஹாலாகும்.
- இது உயிரி எரிபொருள்கள், மருந்துப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் சுவையூக்கிகள், வர்ணங்கள், அரக்குகள் மற்றும் இரசாயன உற்பத்தி ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
டீசல் கலப்பின் முக்கியத்துவம்
- இந்தியாவில் டீசல் நுகர்வானது, பெட்ரோல் நுகர்வை விட ஏறக்குறைய இருமடங்காக உள்ளது.
- டீசலுடன் உயிரி எரிபொருள்களைக் கலப்பது பின்வரும் அம்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்: எரிபொருள் இறக்குமதியைக் குறைத்தல், எரிசக்திப் பாதுகாப்பு, கார்பன் உமிழ்வைக் குறைத்தல்.
எத்தனால் கலப்புத் திட்டம்
- கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 1%-லிருந்து ஏறக்குறைய 20% (E20) வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைத்துள்ளது.
- E20 என்பது பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படுவதைக் குறிக்கிறது.
அதிக எத்தனால் கொண்ட எரிபொருள் முன்னெடுப்புகள்
- பின்வருவனவற்றுக்கான வரைவு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன:
- E85 எரிபொருள் (85% எத்தனால் + 15% பெட்ரோல்)
- E100 எரிபொருள் (ஏறக்குறைய தூய எத்தனால்)
- இந்த எரிபொருள்களுக்காகத் தனி எரிபொருள் விநியோக இயந்திரங்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

