வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

ஐஎன்எஸ் தமால்

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்”, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

125 மீட்டர் நீளம், 3,900 டன் எடை கொண்ட இந்தப் போர்க்கப்பல், இந்திய, ரஷிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் போர்க்கப்பல் கட்டுமானத்தின் சிறந்த நடைமுறைகளில் தயாரிக்கப்பட்டது.

கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளைக் குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை தாங்கிச் செல்லும் திறன் உள்பட இதில் 26 சதவீத தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் உபகரணங்கள், இந்தியாவில் மேம்படுத்தப்பட்டவை

கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவிலிருந்து இந்திய கடற்படையில் இணையும் 8-ஆவது ‘கரிவாக்’ வகை போர்க்கப்பல் இதுவாகும்.

இந்தியா-ரஷியா ஒத்துழைப்பில் இரு நாடுகளிலும் தலா 2 போர்க்கப்பல்கள் தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டன. ரஷியாவில் இருந்து தற்போது 2 ஆவது கப்பலின் தயாரிப்பு நிறைவடைந்து, கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் ‘துஷில்’ ‘தல்வார்’, ‘தேக்’ உள்பட 4 வெவ்வேறு வகைகளில் ஒரே மாதிரியான திறன்கள் மற்றும் உபகரணங்கள், ஆயுதம் மற்றும் சென்சார் அமைப்பில் பொதுவான தன்மை கொண்ட 10 கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும்.

உதயகிரி

2-ஆவது ‘பி17ஏ போர்க்கப்பல்: ‘நீலகிரி’ வகை (பி17ஏ) போர்க்கப்பலின் இரண்டாவது கப்பல் ‘உதயகிரி’ கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட பி17ஏ போர்க்கப்பல்கள்,
முந்தைய பி17 போர்க்கப்பல்களுடன் ஒப்பிடுகையில் 4.54 சதவீதம் பெரியதாகும்.

மேலும், இந்தியாவின் கடல்சார் நலன்களில் அச்சுறுத்தல்களை சமாளிக்க, ஆழ்கடலில் செயல்படும் திறன் கொண்டவை

மும்பையின் ‘மஸாகோன்’ மற்றும் கொல்கத்தாவின் ‘கார்டன் ரீச்’ கப்பல் கட்டும் நிறுவனங்களில் மொத்தம் 7 பி17ஏ போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2 ஆவது பி17ஏ கப்பல் உதயகிரி” மும்பையில் தயாரிக்கப்பட்டு, கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

சக்தி இராணுவப் பயிற்சி

பிரெஞ்சு இராணுவ பயிற்சியான ‘சக்தி 2025’ இன் எட்டாவது பதிப்பு பிரான்சில் இந்தியா நிறைவடைந்தது.

இந்த பயிற்சியில் பிரெஞ்சு இராணுவம், வெளிநாட்டு படைப்பிரிவு, பிரெஞ்சு வான்படை மற்றும் விண்வெளிப் படை, மற்றும் பிரெஞ்சு கடற்படை ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போர்வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

90 பேர் கொண்ட இந்திய குழுவில் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் பட்டாலியன் மற்றும் பிற சேவைகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

Next Current Affairs வரலாறு >