சுவாமி (SWAMIH) நிதி
- சூழல்: இந்தியாவின் வீட்டுவசதித் துறையை ஆதரிக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்த மிக முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்று ‘மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதி முதலீட்டு நிதிக்கான சிறப்புச் சாளரம்’ (SWAMIH Fund) ஆகும்.
சுவாமி (SWAMIH) நிதி பற்றி
- 2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிதி, நிதிச் சிக்கல்களால் பாதியில் நின்றுபோன வீட்டுவசதித் திட்டங்களுக்குத் தேவையான இறுதி கட்ட நிதியை (Last-mile funding) வழங்குகிறது.
- இந்தத் திட்டம் மத்திய நிதியமைச்சகத்தால் நிதியளிக்கப்படுகிறது (Sponsored).
- இது ஸ்டேட் பாங்க் குழுமத்தைச் சேர்ந்த SBICAP வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
நடப்பு தகவல்கள்- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை நீக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இத்தகைய அறிவிப்பு முறைப்படி சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தாக்கம் மற்றும் முடிவுகள்- இந்த முன்முயற்சியின் மூலம் இதுவரை 58,596-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி அலகுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- சுமார் 2.38 லட்சம் பயனாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில், மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பர்ப்பிள் ஃபெஸ்ட் (Purple Fest)- சூழல்: மாற்றுத்திறனாளிகளின் (திவ்யாங்ஜன் – Divyangjan) திறமைகள் மற்றும் சாதனைகளைக் கௌரவிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை ஊக்குவிக்கவும் குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘பர்ப்பிள் ஃபெஸ்ட்’ ஏற்பாடு செய்யப்பட்டது.
பர்ப்பிள் ஃபெஸ்ட் பற்றி
- மாற்றுத்திறனாளிகளின் திறன்கள், சாதனைகள் மற்றும் லட்சியங்களை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடத்தப்படும் உள்ளடக்கிய நிகழ்வு இதுவாகும்.
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், கண்ணியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளையும் பங்கேற்பையும் உறுதி செய்யவும் இத்திருவிழா முயல்கிறது.
- திறந்தவெளி அரங்கில் (Open Air Theatre) நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பங்கேற்பாளர்கள் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அவர்களது திறமைகள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதில் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்தியது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதிலும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதிலும் சிவில் சமூகக் குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் ஈடுபாட்டை இந்த நிகழ்வு ஊக்குவித்தது.
இந்தியப் பெருமயில் (Great Indian Bustard )- சூழல்: இந்தியப் பெருமயில் பாதுகாப்புத் திட்டம் (Project Great Indian Bustard) தனது நான்காவது ஆண்டின் சிறைபிடித்த இனப்பெருக்கத் திட்டத்தில் (Captive breeding programme) நுழைந்துள்ளது. இச்சிற்றினத்தைப் பாதுகாப்பதற்காக தற்போது சுமார் 70 பறவைகள் சிறைபிடிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இந்தியப் பெருமயில் பற்றி
-
- இந்தியப் பெருமயில் என்பது இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு விவசாய-புல்வெளிப் பறவை ஆகும்.
- இதன் முக்கிய எண்ணிக்கை ராஜஸ்தானில் காணப்படுகிறது.குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சிறிய அளவில் இவை காணப்படுகின்றன.
- இது ஓடிடிடே (Otididae) குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துண்ணிப் பறவை ஆகும்.
- இந்தச் சிற்றினம் பால் ஈருருவமைப்பு (Sexual dimorphism) கொண்டது. அதாவது ஆண் மற்றும் பெண் பறவைகள் தோற்றத்தில் வேறுபடுகின்றன.
- ராஜஸ்தானில், இந்தப் பறவை ‘கோடாவன்’ (Godawan) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
- சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுடன் மோதுதல் போன்ற அச்சுறுத்தல்களை இந்த இனம் எதிர்கொள்கிறது, இது அதன் எண்ணிக்கையை பெருமளவு பாதிக்கிறது.
- வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் (Integrated Development of Wildlife Habitats) கீழ், ஒரு பிரத்யேக இன மீட்புத் திட்டத்தின் மூலம் இந்தப் பறவை பாதுகாக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிலை
- IUCN: மிக அருகி வரும் இனம் (Critically Endangered)
- வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972: அட்டவணை I
- CITES: பின்னிணைப்பு
- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை நீக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இத்தகைய அறிவிப்பு முறைப்படி சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

