தேசிய திட்டங்கள்

ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0

    • சூழல்: தமிழக முதல்வர் மற்றும் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
  • ஜல் ஜீவன் மிஷன் திட்டம் முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் (JJM)

அறிமுகம்

    • 15 ஆகஸ்ட் 2019 அன்று தொடங்கப்பட்டது.
    • நோக்கம்: ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் செயல்படும் வகையிலான வீட்டுத் குழாய் இணைப்பை (FHTC) வழங்குதல்.
    • சமூகம் சார்ந்த மற்றும் அதிகாரப் பரவல் கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் செயல்படுகிறது.
    • திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கிராமப் பஞ்சாயத்துகளும் கிராம நீர் மேலாண்மைக் குழுக்களும் நிர்வகிக்கின்றன.
  • முதன்மைஅமைச்சகம்: ஜல் சக்தி அமைச்சகம்.

முக்கிய அம்சங்கள்

  • அனைவருக்கும் குழாய் இணைப்பு: ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு கிடைக்கிறது.
  • சேவைத் தரம்: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் (LPCD) நீர் வழங்கல்.
  • நீரின் தரத்தைக் கண்காணித்தல்: சோதனைக் கருவிகள் வழங்கப்பட்டு, கண்காணிப்பிற்காக உள்ளூர் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தொழில்நுட்ப அடிப்படையிலான ஆளுகை: டிஜிட்டல் டாஷ்போர்டுகள், புவிக்குறியிடல் மற்றும் இணையவழி கண்காணிப்பு ஆகியவற்றின் பயன்பாடு.
  • அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை: பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் கிராமங்கள், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம்.

நிதி ஒதுக்கீட்டு முறை

    • பொதுவான மாநிலங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
    • வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் 90:10 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • யூனியன் பிரதேசங்கள் (UTs): முழுமையாக மத்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது.

 

ஜல் ஜீவன் இயக்கம் (JJM) 2.0 அமைச்சரவை ஒப்புதல்

  • ஜல் ஜீவன் இயக்கத்தை  உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்திலிருந்து, சேவை வழங்கலை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கமாக மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • சிறந்த நிர்வாகம் மற்றும் நிறுவன வழிமுறைகள் வாயிலாக, கிராமப்புறங்களுக்குக் குழாய் மூலம் நிலையான குடிநீர் விநியோகத்தை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

சுஜலம் பாரத் டிஜிட்டல் கட்டமைப்பு

    • சுஜலம் பாரத்” எனும் பெயரிலான ஒரு தேசிய டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனித்துவமான ‘சுஜல் காவ்ன்’ / சேவைப் பகுதி அடையாள எண் வழங்கப்படும்.
  • குடிநீர் விநியோக அமைப்பு முழுமையும்  நீர் ஆதாரம் முதல் குழாய் முனை வரை  டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்படும்.

ஜல் அர்ப்பண்முன்னெடுப்பு

  • கிராமப் பஞ்சாயத்துகளும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்களும்  இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும், அதனை ஒப்படைப்பதிலும் பங்கேற்கும்.
  • இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் சமூகத்தின் உரிமையுணர்வு ஆகியவற்றை உறுதி செய்கிறது.

ஹர் கர் ஜல் சான்றிதழ்

  • கிராம பஞ்சாயத்துகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பின்னரே தங்களை “ஹர் கர் ஜல்” என அறிவித்துக் கொள்ள முடியும்:
    • பணிகள் நிறைவு.
    • செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன.

JJM-இன் கீழ் எட்டப்பட்ட சாதனைகள்

  • குழாய் நீர் வசதி பெற்ற கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை, 2019-இல் 3.23 கோடியிலிருந்து (17%) 15.80 கோடியாக (81.61%) உயர்ந்துள்ளது.
  • 12.56 கோடிக்கும் அதிகமான புதிய குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜேஜேஎம் 2.0 இலக்கு

  • டிசம்பர் 2028-க்குள் அனைத்து 19.36 கோடி கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் விநியோகம்.
  • அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் ‘ஹர் கர் ஜல்’ கிராமங்களாக சான்றளித்தல்.

விக்சித் பாரத் @2047 தொலைநோக்குப் பார்வை

  • உள்கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து, குடிமக்களை மையமாகக் கொண்ட பயன்பாட்டு அடிப்படையிலான சேவை வழங்கலுக்கு மாறுதல்.
  • கிராமப்புறங்களில் 24×7 குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பின் மூலம் நீடித்த செயல்பாடு, பராமரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

 

பிரதமர் ஆராய்ச்சிக் காப்பாளர் (PMRC) திட்டம் 2026

  • சூழல்: உயர்கல்வித் துறை, ‘பிரதமர் ஆராய்ச்சிக் காப்பாளர் (PMRC) திட்டம் 2026′-க்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
  • இந்தியாவின் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பச் சூழலமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், உலகம் முழுவதிலும் உள்ள திறமையான இந்தியர்களை ஈர்ப்பதற்கும் அவர்களை இச்செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கும் இம்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

  • உலகளாவிய இந்தியத் திறமையாளர்களை, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் இணைத்தல்.
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல்.
  • சர்வதேச வல்லுநர்களுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகள்

  • இந்தத் திட்டம் 13 முன்னுரிமைத் துறைகளை உள்ளடக்கியது, அவற்றுள்:
  • மேம்பட்ட கணினித் துறை
  • குறைக்கடத்திகள்
  • இணையப் பாதுகாப்பு
  • ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிற முக்கியத் துறைகள்.

PMRC ஃபெலோக்களுக்கான நன்மைகள்

  • ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஃபெலோஷிப் ஆதரவு.
  • புதுமையான திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி மானியங்கள்.
  • மேம்பட்ட ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளுக்கான அணுகல்.
  • இந்தியாவில் உள்ள முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள்.

செயல்படுத்தும் முறை

  • இந்தியாவின் விரிவடைந்து வரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலில் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
    ஃபெலோக்கள் முன்னுரிமைத் துறைகளில்
  • ஃபெலோக்கள் முன்னுரிமைத் துறைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்குப் பங்களிப்பார்கள்.
< Previous Current Affairs Next தேசிய திட்டங்கள் >