பிரதமர் முத்ரா யோஜனா (PMMY)
-
- சூழல்: பிரதமர் முத்ரா யோஜனா (PMMY) தொடங்கப்பட்டு இந்தியா 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- பிரதமர் முத்ரா யோஜனா ஏப்ரல் 8, 2015 அன்று தொடங்கப்பட்டது.
- இது நிதியுதவி கிடைக்காத நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மைத் திட்டமாகும்.
திட்டத்தின் நோக்கம்
- சிறு தொழில்களுக்கு பிணையில்லா கடன்களை வழங்குதல்.
- நிதி உள்ளடக்கம் மற்றும் அடிமட்ட அளவிலான தொழில்முனைவை ஊக்குவித்தல்.
- சிறு மற்றும் முறைசாரா துறை நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்குதல்.
முக்கியத்துவம்
- பாரம்பரிய வங்கித் தடைகள் மீதான தேவையைக் குறைத்தது.
- குறிப்பாக இளைஞர்களிடையே சுயவேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கியது.
- அடிமட்ட அளவில் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை ஊக்குவித்தது.
- முந்தைய கடன் முறைகளுக்கு மாற்றாக மிகவும் உள்ளடக்கிய ஒரு முறையை வழங்கியது.
நடப்பு தகவல்கள்- நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய நான்கு நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய இந்த நான்கு படைப்புகளும் நான்கு வேதங்களின் சாரத்தை நமக்கு வழங்குகின்றன.
சாதனைகள்- சுமார் 58 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- மொத்த கடன் தொகை ₹40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
- வழங்கப்பட்ட கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சுமார் 20% கடன்கள் முதன்முறை தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடன் சிறப்பம்சங்கள்
- ₹20 லட்சம் வரை பிணையில்லா கடன்களை வழங்குகிறது.
- சிறு தொழில்களுக்கான எளிதான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கடன் செயல்முறை.
முத்ரா கடன்களின் வகைகள்
- சிசு (Shishu): ₹50,000/- வரையிலான கடன்கள்.
- கிஷோர் (Kishore): ₹50,000/- க்கு மேல் ₹5 லட்சம் வரையிலான கடன்கள்.
- தருண் (Tarun): ₹5 லட்சத்திற்கு மேல் ₹10 லட்சம் வரையிலான கடன்கள்.
- தருண் பிளஸ் (Tarun Plus): ₹10 லட்சத்திற்கு மேல் ₹20 லட்சம் வரையிலான கடன்கள்.
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா
- பின்னணி : பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈட்டுத் தொகையை பெறுவதற்கான சேவைகளை தானியங்கி முறையில் செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- அதன்படி, மருத்துவமனைகளில் இருந்து கோரப்படும் காப்பீட்டுத் தொகை தானியங்கி முறையில் பரிசீலித்து உடனடியாக விடுவிக்கும் வசதிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
- இதன் மூலம் காப்பீட்டுத் தொகைக்காக பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) பற்றி
- இத்திட்டம் 2018 செப்டம்பர் 23 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கப்பட்டது.
- மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார ஆணையத்தால் (NHA) “ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டம் 12 கோடிக்கும் அதிகமான ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைகளுக்காக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5,00,000 வரையிலான பணமில்லா மருத்துவமனை சிகிச்சை காப்பீட்டை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நடப்பு தகவல்கள்
- பகுதி V, சரத்து 124 – இந்திய உச்சநீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் அமைப்பைப் பற்றி விளக்குகிறது.
- இந்திய அரசியலமைப்பின் சரத்து 124(4)-ன் படி, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது பணி செய்ய இயலாமை ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பதவியிலிருந்து நீக்க முடியும். இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் ஆணை மூலமே அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
- பகுதி XV, சரத்து 324 – தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
- இந்திய அரசியலமைப்பின் சரத்து 324(5), இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் அதே நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க முடியும் என்று குறிப்பிடுகிறது.
- உன்னத தமிழகம்
- UEF வர்த்தக உச்சிமாநாடு 2025 சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
- இந்த நிகழ்வு “உன்னத தமிழகம் – 2047-க்குள் தமிழகத்திற்கு 4 டிரில்லியன் டாலர் (4Tn)” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைந்தது. இது இந்தியாவின் 100-வது சுதந்திர ஆண்டிற்குள் தமிழ்நாட்டை மிகவும் வளர்ந்த மற்றும் செழிப்பான மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு இலக்கை வெளிப்படுத்துகிறது.
- “4Tn” என்பது நீடித்த வளர்ச்சி மற்றும் நீண்டகால செழிப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியப் பொருளாதார மைல்கல்லைக் குறிக்கிறது.
நடப்பு தகவல்கள்
- நாரி சக்தி வந்தன் அதினியம்
- செப்டம்பர் 2023-ல், நாடாளுமன்றம் 106வது அரசியலமைப்பு (திருத்தச் சட்டம்) 2023 அல்லது நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தை நிறைவேற்றியது. இது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது. ஏற்கனவே பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.
- நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய நான்கு நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய இந்த நான்கு படைப்புகளும் நான்கு வேதங்களின் சாரத்தை நமக்கு வழங்குகின்றன.

