பாதுகாப்புத் தொழில் துறையில் ரூ.75,000 கோடி முதலீடு இலக்கு நிர்ணயம்.
- இந்த இலக்கை தமிழ்நாடு நிர்ணயித்துள்ளது.
- வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைசார்ந்த நிறுவனங்களுக்கான மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை – திட்டங்கள்.
- கோவை வரப்பட்டியில் – பாதுகாப்புத் தொழில் துறைப் பூங்கா‘
- விமான பழுதுபார்த்தல், பராமரிப்பு மேற்கொள்ள நேரடியாக ஓடு தள அணுகு வசதியுடன்கூடிய வான்வெளிப் பூங்கா – சூலூர்
- சென்னை – வல்லம் வட காலில் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை வான்வெளி நிறுவனங்களுக்காக ஏரோ-ஹப் ஆகிய திட்டங்களாகும்.
யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்
- தமிழக வனப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- வனவிலங்கு வார கொண்டாட்ட நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
- யானைகள் பாதுகாப்பு திட்டம் 1992 ஆம் ஆண்டு இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கொண்டு மத்திய அங்கத்துடன் நிதியுதவி செய்யப்படும் திட்டமாக (Centrally Sponsored Scheme – CSS) தொடங்கப்பட்டது.
- தமிழக வனப்பகுதிகளில் தற்போது 3,170 யானைகள் உள்ளன.
- கடந்த ஆண்டை விட 107 யானைகள் அதிகம் உள்ளன.
வனவிலங்கு வார கொண்டாட்ட நிகழ்வு
- இந்தியாவில் முதல் வனவிலங்கு வாரம் 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் 8 வரை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- வனவிலங்குகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களை பாதுகாக்கும் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கம் ஆகும்.
சென்னை ஒன் – செயலி
- நாட்டிலேயே முதல்முறையாக அனைத்துப் பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.
- சென்னையில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் இதனை உருவாக்கியுள்ளது.
- இது செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கபட்டது.
-
- இந்தச் செயலியைப் பயன்படுத்தி மாநகர் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம்
- இந்த செயலியை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பயன்படுத்த முடியும்.
தமிழக அரசு – அரசாணை வெளியீடு
- மருத்துவமனைக்கு வருபவர்களை ‘நோயாளிகள்’ என அழைக்காமல் ‘மருத்துவப் பயனாளர்கள்” என அழைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
- ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வில் முதல்வர் இதனை அறிவித்துள்ளார்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
- 02 ஆகஸ்ட் 2025 அன்று தொடங்கப்பட்டது.
- பொதுமக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தொடக்க சிகிச்சைகளை அவர்களது அருகில் கொண்டு செல்லும் முயற்சி ஆகும்.
தென்இந்தியாவிலே மிகநிளமான பாலம்
- இது கோவை மாவட்டம் அவினாசி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
- இப்பாலத்திற்கு G.T நாயுடு என்றுபெயர் சுட்டப்பட்டுள்ளது.
- புதிய தொழில்நுட்பமான சைனஸ் பிளாட் இப்பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இதன் அகலம்-17.25 நிளம்-10.10 கி.மீ ஆகும்.
விலங்கு பரிமாற்ற திட்டம்
- மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் உயிரியல் பூங்காக்கள் இடையே அனுமதியுடன் விலங்குகள் பரிமாற்றம் செய்ய அனுமதி வழங்கும் திட்டம் ஆகும்
- தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டம்
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
- இதன் முலம் ஜென் ரைஸ் (GenRise) என்ற புதிய முயற்சி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
- இது ஜெனரேஷன் இந்தியா ஃபௌண்டேஷன் (Generation India Foundation) உடன் இணைந்து, 2028 மார்ச் மாதத்திற்குள் 35,000 இளம் பெண்கள் மற்றும் ஆண்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றவதே இதன் நோக்கமாகும்.
ஜென் ரைஸ்
- நமது மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரும் இளைஞர்களும் உயர்ந்து, வெற்றி பெற்று, வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் வாய்ப்பைப் பெறுவதை உறுதிப்படுத்துவதே இந்தமுயற்சி ஆகும்.

