குழந்தை இறப்பு விகிதம் குறித்த ஐ.நா. அறிக்கை (2024)
-
- பின்னணி: 2024-ஆம் ஆண்டில், சுமார் 4.9 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பே உயிரிழந்தன,இதில் 2.3 மில்லியன் பச்சிளம் குழந்தைகளும் அடங்கும்.
- குறைந்த செலவிலான தலையீடுகள் மற்றும் தரமான சுகாதாரச் சேவைகள் எளிதில் கிடைப்பதன் மூலம், இந்த இறப்புகளில் பெரும்பகுதியைத் தடுத்திருக்க முடியும்.
- “குழந்தை இறப்பு விகிதத்தின் நிலைகள் மற்றும் போக்குகள்” (Levels and Trends in Child Mortality) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, 2000-ஆம் ஆண்டிலிருந்து உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பாதியளவுக்கு மேல் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- எனினும், 2015-ஆம் ஆண்டிலிருந்து, இந்த இறப்பு விகிதக் குறைவின் வேகம் 60 சதவீதத்திற்கும் மேலாக மந்தமடைந்துள்ளது.
- கடந்த இரண்டு தசாப்தங்களாக, தெற்காசியப் பிராந்தியத்தில் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- 1990-ஆம் ஆண்டிலிருந்து பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் (NMR) குறைந்துள்ளதாக, அமைச்சகம் தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது. 1990-இல், இந்தியாவில் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 57 என்ற அளவில் இருந்த பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம், 2024-இல் 17-ஆகக் குறைந்துள்ளது.
- மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் (U5MR) கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது — 1990-இல் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 127 என்ற அளவில் இருந்த இந்த விகிதம், 2024-இல் 27-ஆகக் குறைந்துள்ளது.
- பொது சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட இலக்குசார் தலையீடுகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைப் பிரசவ முறைகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசித் திட்டங்கள் ஆகியவையே இந்தக் கணிசமான குறைப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளன.
நடப்பு தகவல்கள்
- சிந்து நதியானது “இந்தியாவின் டைக்ரிஸ்” என்று அழைக்கப்படுகிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை- 2026-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் ஃபின்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக இது தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாகத் திகழ்கிறது. ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
- இந்தியா உலக மகிழ்ச்சி அறிக்கையில் 116வது இடத்தைப் பிடித்தது.
நடப்பு தகவல்கள்
- எத்தில் குளோரோஃபார்மேட் (Ethyl chloroformate) என்பது, மருந்து மற்றும் வேளாண் வேதியியல் பொருட்கள் உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் இடைநிலைப்பொருளாகும்.
- உலகளாவிய தேங்காய் உற்பத்தியில் 30.37% பங்களிப்புடன், இந்தியா உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி நாடாகத் திகழ்கிறது.

