அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள்

அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம்

  • அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
  • இவற்றில் 25 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன. 
  • தமிழகத்தில் 18 நிலையங்களும், கேரள மாநிலத்தில் 5, கர்நாடகா, புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளன.

அடிப்படை வசதிகள் மேம்பாடு:

  • நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள். பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வை ஃபை வசதி, இயற்கைக் காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

கிராமங்களுக்கு இணையவசதி

  • பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களுக்கு இணையவசதியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுவரை சுமார் 1.94 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், பாரத்நெட் திட்டத்தின் கீழ் 6.4 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதியை வழங்க ரூ.1,39,579 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனமானது கிராமங்களில் இணையவசதியை வழங்கி வருகிறது. கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளையும் இணையவசதியின் கீழ் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >

People also Read