தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்
- பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- “மானியக்கோரிக்கை” என்பது அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளால் எழுப்பப்படும் நிதிக்கான முறையான கோரிக்கையாகும்.
குறிப்பு
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 203 வது பிரிவு ஆளுநரின் பரிந்துரையின்றி மானியக்கோரிக்கை எழுப்ப முடியாது என்று கூறுகிறது.
டிஜியாத்ரா வசதி
- சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா வசதி தொடங்கப்பட்டது.
- இது ஏற்கனவே இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜியாத்ரா வசதி பற்றி
- தொடக்கம் – டிசம்பர் 1, 2022.
- குறிக்கோள் – விமானப் பயணிகளுக்கு சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்குதல்.
- தொடங்கப்பட்டது – சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜியாத்ரா அறக்கட்டளை