ஆசியாவில் திறமையான மனித வளம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதல் 10 பிராந்தியங்களில் ஒன்று
- ஆசியாவில் திறமையான மனித வளம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதல் 10 பிராந்தியங்களில் ஒன்றாகும், மேலும் நிதி ஆயோக் மாநிலத்தை புத்தாக்க சூழலமைப்புக்கான ஒரு மாதிரியாக விவரித்துள்ளது.
- சென்னை மென்பொருள் சேவைகளின் தலைநகராகவும், மருத்துவ சுற்றுலாத் துறை மற்றும் வேளாண் ஸ்டார்ட்-அப்களுடன் செழிப்பாகவும் உள்ளது
- மாநிலம் கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் 2,000 தொடக்க நிறுவனங்களிலிருந்து 10,000 க்கும் மேலாக வளர்ந்துள்ளது,
- உலகளாவிய ஸ்டார்ட்அப் அறிக்கை 2024, சென்னையை 18வது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது.
- மாநிலத்தில் பரந்த பொருளாதார விரிவு உள்ளது, சுமார் 30% உற்பத்தித் துறையிலிருந்தும், மீதமுள்ளவை பரந்த சேவைத் துறைகளிலிருந்தும் வருகின்றன.
கிராமம் தோறும் புத்தொழில்
- தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க திட்டம் (StartupTN) இந்த ஆண்டு “கிராமம் தோறும் புத்தொழில்” என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ளது , இது அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவு, கிராமப்புற புத்தாக்கம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டது.
- இந்தக் கொள்கை மூன்று முக்கிய உள்ளடக்கிய அம்சங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது – பாலின உள்ளடக்கம், சாதி உள்ளடக்கம் மற்றும் புவியியல் உள்ளடக்கம்.
- தமிழ்நாட்டில் தற்போது 10,700 க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் உள்ளன.
- “2023 இல், இந்திய அரசின் ஸ்டார்ட்-அப் வரையறையை சிறிது மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தியது
- மத்திய அரசு ஒரு தொடக்க நிறுவனத்தை 10 ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடையதாகவும், ₹100 கோடிக்கும் குறைவான விற்றுமுதலுடன் வரையறுக்கும் போது,தமிழ்நாட்டின் கொள்கை விற்றுமுதல் வரம்பை ₹50 கோடியாக திருத்தியுள்ளது.”
- தமிழ்நாட்டின் வரையறை புதிய புத்தாக்கங்களுக்கு அப்பால் விரிவடைகிறது. உதாரணமாக, மின்-வணிகம் இனி ஒரு புத்தாக்கமாக கருதப்படாவிட்டாலும், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் – ஒரு பழங்குடியினர் போன்றவர்கள் – தங்கள் பொருட்களை விற்க ஒரு இணையதளத்தைப் பயன்படுத்தினால், அது தமிழ்நாடு அரசாங்கத்திற்கு ஒரு தொடக்க நிறுவனமாக தகுதிபெறும்.
தமிழ்நாட்டில் 10,800 தொடக்க நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
- மார்ச் 2021 வரை, தமிழ்நாட்டில் 2,032 தொடக்க நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன, இப்போது இந்த எண்ணிக்கை 10,800 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இவற்றில் ஏறக்குறைய 50% பெண்களால் நிறுவப்பட்டவை.
- “கடந்த நான்கு ஆண்டுகளில், ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூரில் பிராந்திய புத்தாக்க மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.”
- “பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சுமார் 31,11,000 மாணவர்களுக்கு தொழில்முனைவு மற்றும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
- TANSEED திட்டத்தின் கீழ் 205 க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் பயனடைந்துள்ளன (36 பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (SC/ST) தொடக்க நிறுவனங்கள் உட்பட).
- “புதிய வணிகங்களை அறிமுகப்படுத்த ‘லாஞ்ச் பேட்’ திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ‘முன் அடைகாப்பக மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
- 59,584 தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டனர். இதில் 21,281 பேர் பெண்கள், 9,224 பேர் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 2,497 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 717 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.”