Tag: சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்

முக்கிய தினங்கள்

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 'உலக போதைப்பொருள் தடுப்பு தினம்' என்றும் அழைக்கப்படும் 'போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்', ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தின் கருப்பொருள் "ஆதாரங்கள் தெளிவாக உள்ளன: தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யுங்கள்" என்பதாகும். போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை நாடு முழுவதும் கடைபிடிப்பதன் ஒரு பகுதியாக, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் , "நஷா முக்த் பாரத் அபியான் – விக்சித் பாரத் கி பெஹ்சான்" (போதைப்பொருள் இல்லாத இந்தியா – வளர்ந்த இந்தியாவின் அடையாளம்) என்ற உள்ளூர் கருப்பொருளின் கீழ் 'நஷா முக்த் பாரத் சப்தா' (ஜூன் 17–26, 2026) எனும் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை தொடங்கி வைத்தது.   சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் சபையின் 'சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்' ஆண்டுதோறும் ஜூன் 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான 'சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தின்' கருப்பொருள் "Torture : a crime against humanity"என்பதாகும்.