Tag: பிரதமர் மோடி தமிழகம் வருகை – பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு நிகழ்வுகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை - பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் சென்னை –கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை தொடக்கி வைக்கிறார் ரூ.5200 கோடிக்கு மேலான மதிப்பில் விமான நிலையம், இரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களைத் துவக்குதல், கொடியசைத்து தொடங்குதல் மற்றும் அடிக்கல் நாட்டுதல். துவக்குதல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (கட்டம்-I). தேசிய நெடுஞ்சாலை-785-ல் மதுரை - செட்டிக்குளம் வரை மேல்நிலைப் பாதை நான்கு வழிச்சாலை. தேசிய நெடுஞ்சாலை-785-ல் நத்தம் - தோவரங்குறிச்சி வரை மேல்நிலைப்பாதை நான்கு வழிச்சாலை. அடிக்கல் நாட்டுதல் தேசிய நெடுஞ்சாலை-744-ல் திருமங்கலம்-வடுகப்பட்டி பிரிவுக்கு நான்கு வழிச் சாலை அமைத்தல்.  தேசிய நெடுஞ்சாலை-744-ல் வடுகபட்டி - தெற்கு வெங்கநல்லூர் பிரிவுக்கு நான்கு வழிச் சாலை அமைத்தல். நீலகிரி மாவட்டம் காசநோய் இல்லாதநிலையை எட்டியதற்காக தமிழகத்துக்கு பதக்கம் வழங்கப்பட்டது.                                                           காசநோய் இல்லா நிலையை எட்டுவதற்கான திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு தங்கப்பதக்கமும், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ளிப்பதக்கமும்,கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வெண்கலப் பதக்கமும் மாநாட்டில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நவீன டெலிகோபால்ட் கருவி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட உள்ளது. வழக்கமான கதிர்வீச்சு சிகிச்சையை விட இது புற்றுநோய் செல்களை மிகவும் துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். 'ட்ரூ பீம் ரேடியேஷன்' முறை மற்றும் 'டெலி கோபால்ட்' முறை ஆகியவை கதிர்வீச்சு சிகிச்சைக்காக நிறுவப்பட்ட அதிநவீன கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.