Tag: நம்ம சாலை செயலி தொடக்கம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

நம்ம சாலை செயலி தொடக்கம் தமிழ்நாட்டில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் நெடுஞ்சாலைதுறைக்குத் தெரிவிக்கும் வகையில், 'நம்ம சாலை செயலியை' தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘விபத்து இல்லாத’ தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதையும், பள்ளங்கள் இல்லாத சாலைகளை உறுதி செய்வதையும்  இந்த செயலி  நோக்கமாக கொண்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலைத் துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைப்பேசி செயலி வாயிலாக புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இயற்கை பேரிடர் காலங்களில் விழுந்த மரங்கள் மற்றும் வெள்ளம் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்யவும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.