மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான குறியீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த குறியீட்டில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. முதல் 5 இடங்களில் தென் மாநிலங்கள் 4 இடங்களைப் பிடித்துள்ளன. இந்திய நீதி அறிக்கையை (IJR) டாடா அறக்கட்டளை 2019-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது டாடா அறக்கட்டளை வெளியிடும் 3–ஆவது இந்திய நீதி அறிக்கையாகும். மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான குறியீட்டில் கர்நாடகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது.