வரலாறு
விருதுகள் & கௌரவங்கள்
ஹார்ட் லேம்ப் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றது.
- கன்னட எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் செயல்பாட்டாளர் பானு முஷ்தாக், 77, ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் தனது மக்கள், அவர்களின் மகிழ்ச்சிகள், துயரங்கள் மற்றும் கவலைகளைப் பற்றி எழுதத் தொடங்கினார்.
- ஹார்ட் லேம்ப், 1990 முதல் 2023 வரை எழுதப்பட்ட அவரது படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு, தீபா பாஸ்தியால் மொழிபெயர்க்கப்பட்டு, பிரெஞ்சு, இத்தாலியன், டேனிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் உள்ள புத்தகங்களைக் கொண்ட இறுதி பட்டியலிலிருந்து 2025 சர்வதேச புக்கர் பரிசை வென்றது.
- இது கன்னடத்திற்கான முதல் வெற்றியாகும் மற்றும் முதல் முறையாக சிறுகதை தொகுப்பு விருதினை வென்றுள்ளது
- இந்திய எழுத்தாளருக்கான விருது, கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ நாவலுக்காக டெய்சி ராக்வெல் இந்தியில் இருந்து மொழிபெயர்த்த மதிப்புமிக்க இலக்கிய பரிசை வென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது.
தாதாசாகேப் பால்கே மராத்தி சமஸ்கிருதிக் கேரி சிறப்பு விருது
- கலைத்துறையில் சிறந்த பங்களிப்புகளைச் செய்த மூன்று புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு, தாதாசாகேப் பால்கே மராத்தி சமஸ்கிருத கரி சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- பத்மா சுப்ரமண்யம், மூத்த பரதநாட்டிய நிபுணர், நடன இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர் கே.என். இராமசாமி, பாரதீய வித்யா பவன், சென்னை கேந்திரத்தின் இயக்குநர் எம். முரளி, என்.கே.எம். அறக்கட்டளையின் நிறுவனர் ஆகியோர் விருது பெற்றனர்.
இராணுவ விருதுகள்
- வீரதீர செயல்களை செய்த 39 பேருக்கு ‘கீர்த்தி சக்ரா’, ‘சௌர்ய சக்ரா” விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
- ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர் ரவிக்குமார், கர்னல் மன்ப்ரீத் சிங், நாயக் தில்வார் கான், மேஜர் மன்ஜீத், மேஜர் மல்லராம கோபால் நாயுடு, ஜம்மு-காஷ்மீர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஹிமாயுன் முசாமில் பட் ஆகிய 6 பேருக்கு ‘கீர்த்தி சக்ரா’ விருது வழங்கப்பட்டது.
- இதேபோல ஆயுதப் படைகள், மத்திய ஆயுத காவல் படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என 33 பேருக்கு சௌர்யசக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.
- ஹவில்தார் ரோகித் குமார் கிகோன், எல்லை சாலை அமைப் பைச் சேர்ந்த விஜயன் குட்டி ஆகியோருக்கும் சௌர்ய சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இதில் ரோகித் குமார் பணியின்போது லடாக்கில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.