முக்கிய தினம்
உலக மண் தினம்
- உலக மண் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, மண் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவளிக்கிறது.
உலக மண் தினத்தின் பின்னணி
- சர்வதேச தினத்தைக் கொண்டாடும் யோசனையை முதன்முதலில் சர்வதேச மண் அறிவியல் சங்கம் (IUSS) 2002 ஆம் ஆண்டில் முன்மொழிந்தது.
- தாய்லாந்து மற்றும் உலக மண் கூட்டாண்மை (FAO) ஆகியவற்றின் தலைமையின் கீழ் இந்த முன்மொழிவு வலுப்பெற்றது. இந்த முன்முயற்சியை முறைப்படுத்துவதில் இவை முக்கியப் பங்கு வகித்தன.
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
பாரதிய வாயுயான் விதேயக் மசோதா, 2024
- இந்த மசோதா மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கின்ஜரபு ராம்மோகன் நாயுடு அவர்களால் அறிமுகபடுத்தபட்டது
- 1934-ம் ஆண்டின் பழைய விமானச் சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்புகளை தெளிவாக வரையறுக்கிறது, குறிப்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) பங்கை மேலும் வலுப்படுத்துகிறது.
- விமான பராமரிப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான புதிய வரையறைகளை உள்ளடக்கியுள்ளது.
முக்கிய நபர்கள்
நந்தலால் போஸ் 1882 டிசம்பர் 3 அன்று பீகாரின் முங்கேரில் பிறந்தார்.
1953-ல் பத்ம விபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றார். அவரது 6,800-க்கும் மேற்பட்ட படைப்புகள் தேசிய நவீன கலை காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
1976-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, பழைமைச் சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் சட்டம் 1972-ன் கீழ் அவரது படைப்புகளை “கலைப் பொக்கிஷங்கள்” என அங்கீகரித்தது.