சாதி வாரியான கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
- ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- ஹிமாசல பிரதேசம், உத்தர கண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ் மீர் யூனியன் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
- நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி இந்தக் கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
- கணக்கெடுப்பு தொடங்கும் தேதிகள் தொடர்பான அறிவிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-இன் பிரிவு 3-இன் கீழ் உத்தேசமாக வரும் 16-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்படும்.