‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம்
- தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகம் (NRCD) சமீபத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தின் முதல் கட்டத்திற்கு F934.3 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது காவிரி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புத்துயிர் பெறச் செய்வதற்காக தமிழக அரசால் முன்மொழியப்பட்ட திட்டமாகும்.
- முதற்கட்டத்தில், மேட்டூர் அணையின் கீழ்பகுதியிலிருந்து திருச்சி வரையிலான பகுதிகளை இந்த திட்டம் உள்ளடக்கி உள்ளது.
- இரண்டாம் கட்டத்தில் திருச்சி முதல் பூம்புகார் வரை ஆற்றின் மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கும்.
குறிப்பு
- பூம்புகார் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமாகும்.
- NRCD என்பது ஜல் சக்தி அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.