இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு
- தமிழக அரசு இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது.
- இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நடத்தப்படும்.
- தமிழகத்தில் 26 வனப் பிரிவுகள் மற்றும் 697 தொகுதிகள் கொண்ட வனக்காப்பாளர், வனப் பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
குறிப்பு
- 2022 நிலவரப்படி தமிழகத்தில் 2,961 யானைகள் உள்ளன.
- யானைகள் வழித்தடக் குழு தமிழகத்தில் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது.