தமிழ்நாடு நிகழ்வுகள்

சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு

  • திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • கல்வெட்டுகளில் திருவூற்றத்தூர் என்றழைக்கப்பட்ட ஊட்டத்தூரில் மொத்தம் 13 கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டன. அவற்றில் 5 கல்வெட்டுகள் முழுமையானவை. மற்ற 7 கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன.
  • இந்தக் கல்வெட்டுகளில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் வெற்றிச் சரித்திரத் தகவல்களின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளன. முழுமையாக உள்ள 5 கல்வெட்டுகளில் 4 சோழர் காலத்தியவை. மற்றொன்று பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >