தமிழ்நாடு மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டம்
- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தினார், இது மாநிலம் முழுவதும் மின்னணு கூறுகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்தில் இருந்து பயனடையும் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட மானியங்களுக்கு இணையான ஊக்கத் தொகைகளை வழங்கும்.
- [மாநில அரசு] தமிழ்நாடு அரைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024ஐ உருவாக்கியது, இது மின்னணு பொருட்களின் உற்பத்தியில் மாநிலம் முன்னணியில் இருக்க வழிவகுத்தது.
- “தமிழ்நாடு நாட்டிலேயே அர்ப்பணிக்கப்பட்ட மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது.”
- நிதியாண்டு 2025 இல் தமிழ்நாடு தனது அதிகபட்ச மின்னணு ஏற்றுமதியான 65 பில்லியன் டாலரை பதிவு செய்துள்ளது, இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.2% பங்கைக் கொண்டுள்ளது.
- இது மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் டாலர் என்ற எங்கள் இலக்கை அடைவதற்கு உதவும்.
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்
- நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய்களைப் பிடிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
- தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.
- கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். காப்பகங்கள் அமைப்பதற்கான இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும்.
- விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்.
- மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி பணிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவிக்கையின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு கண்காணிப்புக் குழு அமைத்து அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்புக் குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வது கண்காணிக்கப்படும்.
- பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 5 மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்களை உருவாக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். இத்துடன் 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
- அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதலாக நாய்ப் பிடி வாகனங்கள் உடனடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்.