தமிழ்நாடு நிகழ்வுகள்

மெய்நிகர் அடிப்படையிலான கல்வி மாதிரி கண்டுபிடிப்பு

  • IIT மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கான மெய்நிகர் அடிப்படையிலான கல்வி மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

‘MemoryBytes’ மொபைல் பயன்பாடு:

  • ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் இந்த செயலி  வேலை செய்ய முடியும்.
  • அனைத்து நாடுகளிலும் சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்யும் ஐ.நா.வின் இலக்கை அடைய இந்த திட்டம் உதவும்.
  • வரலாறு, மொழிகள் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களைக் கற்பிக்க இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
  • இந்த திட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே தற்போதுள்ள தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கும்.

விளையாட்டுத் துறைக்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்புகள்

  • ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் திறனுடன் தேவை அடிப்படையிலான நிதி உதவியை வழங்குவதற்காக சிறந்த விளையாட்டு வீரருக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
  • விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை  திட்டத்திற்கான தொகை ஆண்டுக்கு 25 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடக்கிறது.
  • மதுரை, நீலகிரி மற்றும் சென்னையில் விளையாட்டு அறிவியலுக்கான மூன்று மையங்கள் (CSS) விரைவில் திறக்கப்படும்.
  • நாட்டிலேயே முதல்முறையாக, மாநிலத்தில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஆறு மாவட்ட விளையாட்டு மைதானங்களில் ரூ.6 கோடி செலவில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.

நீர் விளையாட்டுகளுக்கான அகாடமி:

  • தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு  அகாடமி அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊரு விளையாட்டு திடல்  திட்டம்:

  • நம்ம ஊரு விளையாட்டு மைதானத் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

டிஜிட்டல் ஹவுஸ் திட்டம்                                                                                                  

  • காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றும் திட்டத்தின் அங்கமாக, டிஜிட்டல் ஹவுஸ் திட்டம் புதன்கிழமை தொடங்கப் பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
  • நேவா(NeVA) திட்டத்தின் கீழ், பேரவை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும்வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • கேள்வி  நேரத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், பதிலளிக்கும் அமைச்சர்கள் பற்றிய விவரத்தை பேரவையில் வைக் கப்பட்டுள்ள நான்கு பெரிய திரைகளில் காண முடியும்.
  • அதன்படி, உறுப்பினர் பெயர், புகைப்படம், விவாதிக்கப்படக்கூடிய பொருள், துறையின் விவரம், உரையாற்றும் நேரம் உள்ளிட்டவற்றை அறிய முடியும்
  • மேலும், இ-விதான் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பை தொடுதிரை கணினியில் காண முடியும் என்று பேரவைத்                                                                தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.  

இ -விதான் செயலி  பற்றி:

  • இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் ஒரு மிஷன் மோட் திட்டம் (MMP).
  • பாராளுமன்ற விவகார அமைச்சகம் (MoPA) என்பது சட்டமன்றங்களைக் கொண்ட 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்துவதற்கான ‘நோடல் அமைச்சகம்’ ஆகும்.
  • e-Vidhan க்கான நிதி MoPA மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MietY) மூலம் வழங்கப்படுகிறது.

நிகழாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள்

  • நிகழாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள், சாதாரண வரிசை, சுயநிதிதிட்டம்,சிறப்புமுன்னுரிமை, தட்கல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற் றும் மேம்பாட்டுக் கழகம் திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.

காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்:                          

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் நோக்கமாக தமிழ்நாடு அரசு மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதம் மரபு சாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில், அரசு தனியார் பங்களிப்புடன் 5,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >