விண்வெளி
மங்கள்யான்-2
- இஸ்ரோ சமீபத்தில் தனது மங்கள்யான்-2 திட்டத்தை வெளியிட்டது.
- இந்த திட்டம் செவ்வாய் கிரகத்தில் ரோவர் மற்றும் ஹெலிகாப்டரை தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மூன்றாவது நாடாகும்.
மங்கள்யான்-1 திட்டம் பற்றி
- இது இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையிலான பயணத் திட்டமாகும்.
- தொடக்கம் – நவம்பர் 05, 2013.
- இந்தியா செவ்வாய் சுற்றுப்பாதைக்கு விண்கலங்களை வெற்றிகரமாக ஏவிய நான்காவது நாடாகும்.
ஸ்பெகுலூஸ்-3பி
- ஸ்பெகுலூஸ்-3பி (SPECULOOS-3b) எனப்படும் பூமியின் அளவிலான புதிய புறக்கோளை சர்வதேச வானியலாளர்கள் குழுகண்டுபிடித்துள்ளது.
- இது பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
- இது மிகவும் குளிர்ந்த சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.
குறிப்பு
- ஸ்பெகுலூஸ் திட்டம் தீவிர குளிர் குள்ள நட்சத்திரங்களை சுற்றும் புறக்கோள்களை தேட உருவாக்கப்பட்டது.