அரசியல் அறிவியல்

அரசு – நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

தர்த்தி அபா ஒன்ஜதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டம்

பழங்குடியினர் நலத்துறையின் முக்கிய திட்டமான தர்த்தி அபா ஜன்ஜதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) முழுமைப்படுத்தல் திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசு 22,000க்கும் மேற்பட்ட “ஜன் சேவா” முகாம்களை நடத்தியுள்ளது.

இந்த முயற்சியின் கீழ் அரசு 53 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை அணுகி, அவர்களுக்கு அரசு திட்ட நன்மைகளைப் பெற உதவியுள்ளது.

DAJGUA பற்றி

DAJGUA திட்டம் 2023இல் தொடங்கப்பட்டது.

முதலில் PM ஜன்ஜதியா உன்னத் கிராம் அபியான் (PM-JUGA) என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், பழங்குடியினர் பெரும்பான்மை கிராமங்களில் அடிப்படை திட்ட முழுமைப்படுத்தலுக்கான ஒரு தொகுப்பாகும் .

இது தோராயமாக 63,000 பழங்குடியினர் கிராமங்களில் சமூக உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார வளர்ச்சியில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காலம்: 5 ஆண்டுகள் (2024-25 முதல் 2028-29 வரை)

நிதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும். PM கதிசக்தி தகவல்தளத்தின் கீழ் கண்காணிப்பு.

Next Current Affairs அரசியல் அறிவியல் >